இலங்கையில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் எயிட்ஸ் தொற்று



நாட்டில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களிடையே எயிட்ஸ் தொற்றுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் மற்றும் பால்வினை நோய் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மேல் மாகாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் மற்றும் அதில் குறிப்பாக ஆண்களிடையே நோய் தொற்று அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எயிட்ஸ் சோதனைகள்

இதனடிப்படையில், இந்தப் போக்கை எதிர்த்துப் போராடுவதற்கு விரிவான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், 2023 ஆம் ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான எயிட்ஸ் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன் சோதனைத் தளங்களில் கணிசமான எண்ணிக்கையிலான நேர்மறை வழக்குகள் கண்டறியப்பட்டதாகவும் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை