கைவிலங்குகளுடன் தப்பிச் சென்ற கைதிகள்




 நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றுள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (28-06-2024) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குருவிட்ட சிறைச்சாலையில் உள்ள இரண்டு கைதிகள் வரக்காபொல துல்ஹிரிய நீதிமன்றம் சென்றபோது கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

களுத்துறை, கோனபொல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபரொருவரும் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற இரு கைதிகளுக்கு எதிராக பெல்மடுல்ல, அத்தனகல்ல, ஹொரணை மற்றும் வரக்காபொல ஆகிய நீதிமன்றங்களில் பல வழக்குகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய கைதிகளை தேடி மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை