திரிபோஷா இன்மையால் - இலங்கையில் குழைந்தைகள் பாதிப்பு!



6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

திரிபோஷா வழங்கப்படாமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


கொழும்பில் நேற்று (22-06-2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனை தெரிவித்தள்ளார்.

6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோசா வழங்குமாறு பல கோரிக்கைகளை முன்வைத்தோம்.

குறித்த வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளே அதிகமாக போசனை குறைபாட்டிற்கு உள்ளாகி வருவதாக கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை