தமிழர் பகுதியில் பசுக் கன்றுக் குட்டியை இறைச்சிக்காக வெட்டி காட்டுப்பகுதியில் வீசியெறிந்த கொடுமை!



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று தும்பங்கேணி பகுதியில் கிருஷ்ணபிள்ளை- சுகுமாறன் என்பவர் பராமரிக்கப்பட்டு வந்த பசுவும் கன்றுக் குட்டியும் ஆகும்.

நேற்று முன் (28-10-2024)ஆம் திகதி இரவு கட்டிவைத்த பால்குடிக்கும் கன்றை சமூக விரோதிகளால் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது.


போரதீவுப்பற்று பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள் களவாடப்பட்டு வருகின்றன.

களவாடியவர்கள் அதனை பற்றைக்காட்டுப் பகுதியில் வைத்து இறைச்சிக்காக வெட்டியுள்ளதுடன் அதன் மீதிப்பகுதியினை அப்பகுதியில் வீசியெறிந்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


புதியது பழையவை