கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து
அவர்களுக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர (18-10-2024)இம் திகதி வழங்கி வைத்தார்.
புதிய ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டு, அரசியல் தலையீடுகளின்றி தமது சேவைகளை வழங்கக் கூடியவர்களாக இருக்கவேண்டும் என்ற பணிப்புரையையும் ஆளுநர் விடுத்துள்ளார்.
தலைவர் - பி.எச்.என். ஜெயவிக்ரம (ஓய்வுபெற்ற முன்னாள் திருகோணமலை மாவட்ட செயலாளர்)
உறுப்பினர்களாக,
கே. அருந்தவராஜா (ஓய்வுபெற்ற முன்னாள் திருகோணமலை மேலதிக மாவட்டச் செயலாளர்)
ஜி.எல்.ஆரியதாச மாயா (ஓய்வுபெற்ற முன்னாள் அம்பாறை பிரதேச செயலாளர்)
எஸ். ஹமீத் ரிபாஹிதீன் (ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியர்)