பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) இரண்டாவது நாளாக இன்றைய தினம் (22-11-2024) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு (CID) அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளி தொகுப்பு ஒன்றில் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா (Asath Maulana) வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.
அதில் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல் தாரிகளுக்கும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
5 மணிநேர வாக்குமூலம்
இந்த நிலையில் அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் இரண்டாவது நாளாகவும் இன்று (2ஔ2) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.