வாக்கெண்ணும் பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும்..
1)முதலாம் கட்டம்:
1. வாக்களிப்பு நிலையங்களில் இருந்து பேறப்பட்ட அளிக்கப்பட்ட வாக்கு சீட்டுக்கள் எண்ணிக்கை சரியாக உள்ளதா என கணிப்பீடு செய்வது.
2. வாக்கு சீட்டுக்களை தரம் பிரித்தல் மட்டக்களப்பில் இம்முறை 49, கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் அதற்காக 49, பெட்டிகளில் அந்தந்த சின்னங்கள் ஒட்டப்பட்ட பெட்டிகளில் வாக்குசீட்டுக்கள் பிரித்து போடும் பணி இடம்பெறும் இதில் எந்த எந்த கட்சிக்கு புள்ளடி இட்டனர் என்பது தெரியவரும்.
3. கட்சிகள், சுயேட்சை குழுக்கள் பெற்ற ஏற்கனவே அந்தந்த பெட்டிக்குள் போடப்பட்ட வாக்குகளை தனித்தனியாக எண்ணி 50, வாக்கு சீட்டுக்கள் அல்லது 100, வாக்கு சீட்டுக்களை சேர்த்து றவ்வர் வேன்ட் போட்டு வேறொரு பெட்டியில் அடுக்கப்படும்
4. பின்னர் ஒவ்வொரு கட்சிகள் பெற்ற வாக்குகள் கணிப்பீடு செய்யப்பட்டு அதற்கான படிவங்களில் குறிப்பிட்டு படிவங்கள் தற்காலிகமாக இயங்கும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்(அரச அதிபர்) அலுவலகத்தில் வழங்கப்படும்.
5. இவ்வாறு 46, நிலையங்களிலும் பெறப்பட்ட பெறப்பட்ட அளிக்கப்பட்ட வாக்குகள், நிராகரிக்கப்பட்ட வாக்குகள், செல்லுபடியான வாக்குகள் அங்கு பதியப்படும்
6. செல்லுபடியான வாக்குகளில் 46, நிலையங்களிலும் இருந்து கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் பதியப்பட்ட்டு பின்னர் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆசன விபரமும் கணிப்பீடு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.(இதற்கும் பல மணி நேரம் செல்லும்)
7. வாக்குகளை பிரித்து போடும்போதே நிராகரிப்பு வாக்குகளும் தனியான பெட்டியில் வைப்பார்கள் நிராகரிப்புக்கான வாக்குசீட்டுகள் ( ஒரு சின்னத்திற்கு மேல் புள்ளடி இடல், சினத்திற்கு புள்ளடி இடாமல் இலக்கத்துக்கு மட்டும் புள்ளடி இடல், மூன்று இலக்கத்திற்கு மேலதிகமாக புள்ளடி இடல், சின்னத்திற்கு புள்ளடி இட்டு சுயேட்சை குழுக்களின் இலக்கத்துக்கு அடையாளம் இடல்) இவைகள் நிராகரிப்பு வாக்குகள் எனப்படும்.
8. இந்தபணி முடிந்ததும் அந்தந்த நிலையங்களில் விருப்பு வாக்கு எண்ணும் பணிகளை தொடரலாம்( இரண்டாம் கட்ட வாக்கெண்ணும் பணியில் குறிப்பிட்டுள்ளேன்)
9. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசனங்கள் பெற்ற கட்சிகளும், ஆசன எண்ணிக்கையும் அறிவிக்கப்படும்(உதாரணமாக இலங்கை தமிழ் அரசுக்கட்சி 03, ஆசனங்களும் ஏனைய இரண்டு கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றால் அந்த மூன்று கட்சிகளை தவிர்ந்த ஏனை கட்சிகளை சேர்ந்தவர்கள் அங்கு அவதானிப்பில் நிற்க வேண்டிய தேவை வராது. சிலவேளை தமிழரசு கட்சி 02, ஆசனங்களும் ஏனைய மூன்று கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றால் ஆசனம் பெற்ற கட்சிகள் நான்கை தவிர ஏனைய கட்சிகளுக்கு அங்கு பிரசன்னம் இருக்காது)
2)இரண்டாம் கட்டம்:
விருப்பு வாக்கெண்ணும் பணி..
1. விருப்பு வாக்கெண்ணும்போது இரண்டு உத்தியோகத்தர்கள் என்ற வீதம் பக்கத்தில் இருந்து ஒருவர் வாக்கு சீட்டு விருப்பு இலக்கத்தை கூறுவார் மற்றவர் அதற்கான படிவத்தில் குறிப்பிடுவார். உதாரணமாக எட்டு இலக்கங்கள் வாக்கு சீட்டுக்களில் மாமாறி வரும், ஒருவாக்கு சீட்டில் ஒரு இலக்கம் வரும் அல்லது மூன்று இரண்டு என பக்கத்தில் கூறும் அலுவலரையும், அதை பதியும் அலுவலரையும் முகவர்கள் அவதானிக்கவேண்டும். ஏனெனில் வாக்கு சீட்டில் உள்ள இலக்கத்தை மாற்றி அவருக்கு பிடித்த இலக்கத்தை கூறவும் வாய்ப்புண்டு, அதை பதிபவரும் மாற்றி அவருக்கு பிடித்த இலக்கத்தை பதியவும் வாய்புண்டு. இதை கவனமாக அவதானிக்க வேண்டும்
2. இவ்வாறு எண்ணும்போது ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களுக்களும் பெற்ற மொத்த வாக்குகள் (சமரி) படிவத்தில் கூட்டப்பட்டு பிரதான அலுவலகத்திற்கு வழங்கப்படும்.
3. இவ்வாறு 46, நிலையங்களில் படிவங்கள் பிரதான அலுவலகத்தில் கூட்டப்பட்டு விருப்பு வாக்கின் அடிப்படையில் தெரிவான கௌரவ உறுப்பினர்கள் பெயர் அதற்கான படிவத்தில் பதிந்து அவர்களின் கையொப்பம் பெறப்படும்.
4. இதன்பின்னர் முழுமையான தேர்தல் முடிவு கொழும்பு தேர்தல் ஆணையகத்துக்கு அறிவிக்கப்படும். அதேவேளை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலராலும் வாக்கெண்ணைம் நிலையத்தில் ஒலிவாங்கிமூலம் அறிவிப்பார்.
46, வாக்கெண்ணும் நிலையத்திற்கும் தலா ஒரு நிலையத்திற்கு ஒரு பிரதான தெரிவத்தாட்சி அலுவரும் குறைந்தது 5, உதவித்தேர்தல் அலுவலகர்களும்,140, அரச உத்தியோகத்தர்களும் வாக்கெண்ணும் பணிகளை செய்வார்கள்..(இவ்வாறு 46, நிலையங்களும் ஒரே நேரத்தில் செயல்படும்)
வாக்கெண்ணும் நிலையத்தில் உள்ள சகல கட்சியின் சகல வேட்பாளர்களின் முகவர்களும் வாக்கெண்ணும் நிலையத்தில் அலுவலர்கள் மேசையில் இருந்து வாக்கெண்ணும்போது அந்த நிலையத்திற்குள் (மண்டபம்) சுற்றி அவர் நின்று அவதானிக்கலாம்.
சந்தேகம் வந்தால் அச்சமின்றி கூறி திரும்பவும் இதை காட்டுமாறு கேட்கலாம்.
அமைதியாக இதனை அவதானிக்கலாம்…
வாக்கெண்ணும்பணி நிறைவுற்று உத்தியோக பூர்வமாக 5, பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பெயர் வெளியாகும் வரை எல்லா வேட்பாளர்களும் தேர்தல் வாக்கெண்ணும் நிலையத்தின் முகவர்களாகவே கருதப்படுவர்.
முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் தெரிவான ஐவர் மட்டும் கௌரவ உறுப்பினர்கள் என அழைக்கப்படுவார்கள்.
இதுதான் நடைமுறை….