இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றையதினம் (21-11-2024) இந்தியன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் ரணில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மனைவி மைத்திரி விக்கிரமசிங்க, சாகல ரத்நாயக்க மற்றும் பலர் இந்த பயணத்தில் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.