ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டமைக்கு எதிராக - மட்டு ஊடக அமையம் கண்டனம்


கிளிநொச்சி அலுவலகம் ஒன்றில் கடமையும் பணிபுரியும் ஊடகவியலாளரும் கிளிநொச்சி ஊடக அமையத்தின் செயலாளருமான முருகையா தமிழ்செல்வன் நேற்று மாலை (டிசம்பர் 26) தனது கடமையை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கறுப்பு நிற வாகனத்தில் வந்த இருவர் அவரை கடத்திச் செல்ல முற்பட்டதுள்ளதுடன் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து அவரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


புதிய ஆட்சியொன்று இந்த நாட்டினை பொறுப்பேற்றுள்ள நிலையில் ஊடக சுதந்திரம் தொடர்பிலும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளமையானது.

இந்த நாட்டில்இதுவரையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையென்பதை வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக வடகிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் என்பது தொடர்ச்சியாக இருந்துவருகின்றது.

பல்வேறு வழிகளில் கடந்த காலங்கள் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.இது தொடர்பில் கடந்த காலத்தில் மட்டு.ஊடக அமையம் போராட்டங்களை முன்னெடுத்ததுடன் அது தொடர்பான அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தது.


இந்த நிலையில் தற்போதும் அதேபோன்ற சூழ்நிலையே வடகிழக்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு உள்ளது என்பதையே இந்த தாக்குதல் நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது.

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் மக்கள் பாதிப்புகள் மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரம் மறுக்கப்படுமானால் அது இந்த நாட்டின் ஜனநாயகத்தின் மீதான கேள்வித்தன்மையினைவே வெளிப்படுத்தி நிற்கும்.


எனவே தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளருக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதுடன் அவரின் பாதுகாப்பு தொடர்பிலும் கரிசனை கொள்ளவேண்டும்.

குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதுடன் கடந்த காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் இந்த வேளையில் எங்களது நீதியை கோருகின்றோம்.

மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன் இதுவரையில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்படாமையினையிட்டு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மட்டு.ஊடக அமையம்.
புதியது பழையவை