இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றையதினம் (15-12-2024) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதியாக அநுர பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற இந்திய உயரதிகாரிகளுடன் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இருதரப்பு விவாதங்களை நடத்தவுள்ளனர்.