பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள உட்பட 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவர்கள் தவிர 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 7 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (இரகசியப் பொலிஸ்) புதிய பணிப்பாளராக திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எஸ்.முத்துமலா நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம். தெஹிதெனிய, நுகேகொட பிரிவுக்கு பொறுப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டி.கே.எஸ் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
பரீட்சை பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.யூ.கே. லொக்கு ஹெட்டி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. ஊடகப் பிரிவின் பணிப்பாளராகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.