தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நாளை மறுதினம் (07.01.2025) காற்று சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் 08.01.2025 முதல் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக எதிர்வரும்(08.01.2025) முதல் (12.01.2025) வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அத்தோடு இந்த மழை 12 ம் திகதியைத் தாண்டியும் தொடரும் வாய்ப்புள்ளது. ஏனெனில் எதிர்வரும் (12.01 2025) அன்று மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஒன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளது அடுத்த சில நாட்களின் பின்னரே இதனை உறுதிப்படுத்த முடியும்.
எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நாட்களைக் கருத்தில் கொண்டு தமது நெல், உழுந்து மற்றும் பயறு போன்ற அறுவடைச் செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.
எதிர்வரும் (09.01.2025)முதல் (12.01.2025)முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். எனவே மீனவர்கள் இந்நாட்களில் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
-நாகமுத்து பிரதீபராஜா-