கிழக்கு ஆளுநர் தலைமையில் தைப்பொங்கல் விழா!



கிழக்கு மாகாண கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தைப்பொங்கல் விழா திருகோணமலை - குச்சவெளி பிரதேச வேலூர் மிட்சு மீள்குடியேற்ற பிள்ளையார் கோவிலில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழா இந்து கலாச்சார பழக்கவழக்கங்களின்படி மத சடங்குகள் மற்றும் பண்டைய பழக்கவழக்கங்க முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை