கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக அஸ்மி கடமையேற்பு!



இலங்கை நிருவாக சேவையின் மூத்த அதிகாரியான ஏ.எல்.எம்.அஸ்மி கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவினால் நியமிக்கப்பட்டு நேற்றையதினம் (01-12-2025) கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அஸ்மியின் சேவைத்தரம், தகுதி மற்றும் உள்ளூராட்சி நிர்வாகத்தில் ஒரு தசாப்தகால அனுபவம் என்பவற்றின் அடிப்படையிலும் உள்ளூராட்சி நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு வழங்கிவந்த தலைமைத்துவ வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டு திறமைகள் என்பவற்றை கருத்திற்கொண்டே இந்நியமனம் வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் ஒரு சிறந்த உள்ளூராட்சி மன்றமாக அக்கரைப்பற்று மற்றும் கல்முனை மாநகர சபைகளை  மிளிரச்செய்வதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒருவராகும்.

பொத்துவில், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர், அக்கரைப்பற்று மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளரும், பதிவாளரும், கல்முனை மாநகராட்சி ஆணையாளர், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) போன்றவற்றில் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை