சிறுமியை பாலியல் சேட்டை செய்த லொத்தர் டிக்கெட் வியாபாரி கைது!



அம்பாறை வீரமுனை பிரதேசத்தில் வாடகை வீட்டில் லொத்தர் டிக்கெட் விற்பனை செய்யும் சந்தேக நபர் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டை செய்ததாக சம்மாந்துறை பொலிஸாரினால் (13-01-2025) கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பிரதேசத்தில் 9 வயதுடைய சிறுமியை பாலியல் சேட்டை செய்ததாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை சிறுமியின் தாயார் பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய லொத்தர் டிக்கெட் வியாபாரியை தேடி பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீரமுனை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து லொத்தர் டிக்கெட் விற்பனை செய்யும் அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த (வயது 69) நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை