மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளர் என். தனஞ்சயன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்


மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளர் என். தனஞ்சயன் தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (01.01.2025) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.

மாநகர நகரசபை வளாகத்திலுள்ள ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து புதிய ஆணையாளர் என். தனஞ்சயன் மாநகர சபையின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார்.

அதன் பின்னர் 2025 புதிய வருட கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வகையில் மாநகர சபையின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் அரச சேவை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

அதனையடுத்து மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளர் என். தனஞ்சயன் உத்தியோகத்தர்கள் மத்தியில் விசேட உரையொன்றினை நிகழ்த்தினார். 

இந்நிகழ்வில், மாநகர சபையின் கணக்காளர், பொறியியளாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், மாநகர சபை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

புதியது பழையவை