யாழ் பல்கலைக்கழகத்தில் நிந்தவூர் தமிழ் மாணவனின் சாதனை..!





அம்பாறை மாவட்டம் நிந்தவூரை பிறப்பிடமாக கொண்ட வரதராஜன் டிலக்சனால் மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்                                  

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு வரதராஜன் டிலக்சனினால் புதிய இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரிக்கு சென்ற வரதராஜன் டிலக்சன் அவர்களால், மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காணும் செயற்திட்டம் (The Brain Tumour Navigation System Project) வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் (Mechatronic Engineering Technology) பிரிவின், இறுதி ஆண்டு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை