யானையின் தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதி!




திருகோணமலை - கம்பகொட்ட பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (24-01-2025) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு படுகாயமடைந்தவர் திருகோணமலை, எத்தாபெந்திவெவ- பகுதியைச்சேர்ந்த சிந்தக விமலசேன (42 வயது) எனவும் தெரியவந்துள்ளது.

குறித்து சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,  
வயல் காவலுக்குச்சென்று  வயலுக்குள் நின்ற யானையை விரட்ட முற்பட்ட போது யானை துரத்தித் தாக்கியதாகத் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்..

தற்போது காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை