இலங்கையின் 77ஆவது சுதந்திரதினம்




இன்று இலங்கையின் 77ஆவது சுதந்திரதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

1948, பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில் 132 ஆண்டு கால பிரித்தானியரின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு வருட சுதந்திர தினத்திற்கும் முப்படைகளின் வீரத்தை காட்டும் நாளாகவும் சுதந்திர தினம் காணப்படுகின்றது.


பல் கலாசாரம் கொண்ட நாடு என்பதனால் ஒவ்வொரு கலாசாரத்தின் கலைகளும், சிறப்பியல்புகளையும் நடனம், பாடல், நாடகம் போன்ற வடிவில் வெளிப்படுத்துவார்கள். 


இதன்படி இலங்கையின் 77ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வுகள்  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்படவுள்ளது.

இம்முறை பொதுமக்கள் அதிகமாக பங்கேற்கக் கூடிய கொண்டாட்டமாக சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் கௌரவத்தை மேலோங்க செய்யும் வகையில், சுதந்திர தின நிகழ்வுகள் வெகுவிமரிசையாகவும் அதேவேளை, செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதியது பழையவை