இலங்கையில் மறுபடியும் அரங்கேறிய துப்பாக்கி சூட்டு சம்பவம்



தெஹியத்தகண்டிய பகுதியில் உள்ள தனியார் பண்ணை ஒன்றில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்று, தெஹியத்தகண்டிய, முவபெட்டிகேவல, ஹுலங்பந்தனாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி சூட்டு சம்பவம்
உயிரிழந்தவர் வீரகெட்டிய, எதரம்தெனிய, கிராவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காயமடைந்த நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தெஹியத்தகண்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை