இன்று (19-02-2025)காலை கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சூத்திரதாரி அஸ்மான் சரீப்தீன் எனும் 34 வயது நபர் வேன் ஒன்றில் தப்பி சென்றபோது புத்தளம் பாலாவி பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் முன்னாள் ராணுவ கொமாண்டோ பிரிவை சேர்ந்தவர் என்றும் அறியப்பட்டுள்ளது.
இவர் நீதிமன்றத்துக்குள் நுழைய பயன்படுத்திய சட்டத்தரணிகளுக்கான அடையாள அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.