புனித ரமழான் நோன்பு - எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆராம்பம்!



புனித ரமழான் நோன்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(02-03-2025) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்றைய தினம்(28.02.2025) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன்போதே, ரமழான் நோன்பு தொடர்பான அறிவிப்பு வெளியானது.

இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்கள பிரதிநிதி மற்றும் உலமாக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
புதியது பழையவை