தூக்கில் தொங்கி நிலையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம்



அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி பிரதேசத்திலுள்ள காட்டு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் (06-03-2025) மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்களினால் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்ட அதேவேளை விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு அம்பாறை தடவியல் பொலிஸ் அதிகாரிகள் விஜயம் செய்து தடவியல் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கரைப்பற்று அலிக்கம்பை பகுதியில் ஏரப்பன் ராமன் (69 வயது) என்பவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை செய்தவர் இன்று (06) தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்துள்ளார்.

இம்மரணம் குறித்தும் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை