மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் பல சந்தேக நபர்கள் கைது!



குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுத்திவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லடி,நாவற்குடா, ஆரையம்பதி, புதிய காத்தான்குடி புதுக்குடியிருப்பு உட்பட இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


சட்டவிரோத மதுபான உற்பத்தி
குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்த மற்றும் விற்பனை செய்த 28 பேரும், கேரள கஞ்சாவை வைத்திருந்த மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 18 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை