பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை வரை விளக்கமறியலில் வைப்பதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அதன்படி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (19-03-2025)முற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
வெலிகம – பெலேன பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் அவர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்தநிலையில், குறித்த வழக்கு நாளைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.