இறக்காமம் -வரிப்பத்தான்சேனை பகுதியில் கோர விபத்து!



இறக்காமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான்சேனை பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து வரிப்பத்தான்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டி ஒன்று வரிப்பத்தான்சேனை கெபிடல் சந்தையில் இருந்து,

வாங்காமம் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த லாரி ஒன்றுடன் மோதி இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 40 வயதான பெண் குழந்தை ஒன்றும் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை