நாட்டில் இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் அன்பை பரிமாறி, கொண்டாட்டத்தில் ஈடுபடும் நாள் இன்று(14-04-2025) ஆகும்.
பல்வேறு புதிய தொடக்கங்களுடன் இந்த புத்தாண்டை வரவேற்கும் நம் எல்லோரின் விருப்பங்களும் நிறைவேறட்டும்.
இலங்கையின் கலாசாரம், பண்பாடு என்பனவற்றை எடுத்துக் கூறும் இந்நன்னாளில் நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு புதிய அடிக்கும் எல்லோரும் கைகோர்த்து இணங்கும் நாளாக இந்த புத்தாண்டு மாறட்டும்.
நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூட இந்த புதிய நாளில், இறை ஆசியுடன் "Battinatham news" உறவுகளுக்கு எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.