தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் தமிழின அழிப்பு வாரத்தினை முன்னிட்டு மே18 - முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
அழிப்பு வாரம்
குறித்த நிகழ்வானது நல்லூர் தியாக தீபம் நினைவிடம் முன்பாக நேற்று (11.05.2025) ஆம் திகதி உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் ஆரம்பித்து வைத்தார்.
இன்றைய தினம் ஆரம்பமாகிய தமிழின அழிப்பு வாரம் எதிர்வரும் (18.05.2025) நிறைவடையும்.