பாணந்துறை, மதுபிட்டிய பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
9மிமீ பிஸ்டலைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு ஞாயிற்றுக்கிழமை (25-05-2025) இரவு பதிவானது.
சம்பவம் நடந்த உடனேயே சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்ய பாணந்துறை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.