வேட்பாளர்களின் செலவு அறிக்கை சமர்ப்பிதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!



இந்த ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (27-05-2025) நள்ளிரவுடன் முடிவடைகிறது.

செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறும் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியிருக்கும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.


இதற்கிடையில், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்படும் தாமதங்களால் உள்ளூராட்சி உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு தடைபட்டுள்ளது.

பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பட்டியலை இன்னும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.


இதுவரை பெறப்பட்ட பெயர் பட்டியல்கள் அரசாங்க அச்சக அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தாலும், உள்ளூராட்சி நிறுவனங்களின் அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

உள்ளூராட்சி நிறுவனங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குறித்த தகவல்களை வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும், சுயேச்சைக் குழுக்களிடமும் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை அந்தத் தகவலை வழங்க அவர்கள் தவறிவிட்டனர்.


இதன் காரணமாக, உள்ளூராட்சி நிறுவனங்களில் சபை அமர்வுகள் தொடங்குவதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டுகிறது.

அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டங்களை முறையாக நடத்துவது குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதியது பழையவை