மட்டக்களப்பு செட்டிபாளைய பிரதான வீதியில் கார் துவிச்சக்கரவண்டி மீது மோதி விபத்து - இரு சிறுவர்கள் காயம்!



மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று(10-05-2025) மதியம் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் 14 வயதான சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்துச் சம்வம் பற்றி மேலும் தெரியவருவது. 

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மட்டக்களப்பு அரசடியைச் சேர்ந்தோர் களுதாவளையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று செட்டிபாளையம் மகா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து துவிச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 14 வயதான இரு சிறுவர்கள் காயமடைந்ததுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்த விபத்தில் காரின் முன் பகுதி சேதமடைந்துள்ளதுடன் துவிச்சக்கர வண்டியும் சேதமாகியுள்ளது. 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்துச் செல்கின்றனர்.

புதியது பழையவை