கொழும்பில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை



நிலவும் சீரற்ற காலநிலையால் கொழும்பில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.

கொழும்பின், கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ், ஆமர்வீதி, மாளிகாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

நேற்று (29-05-2025) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழை நிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



மேலும் நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்திலும் மன்னார், அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதியது பழையவை