தேசிய மக்கள் சக்தியின் வருடாந்த மே தினக் கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது.
இலட்சக்கணக்கான ஆதரவாளர்களின் பங்குபற்றுதலில் இந்த மே தினக் கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், சீன மற்றும் இந்திய கம்யூனிசக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.