இலங்கையில் நேற்று(06-05-2025) நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிசை தேர்தலின் உத்தியோக பற்றற்ற முதலாவது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் அகில இலங்கை ரீதியில் வெளியான உத்தியோக பற்றற்ற முடிகளின்படி தமிழரசுக் கட்சியின் கோட்டை என கூறப்பட்ட போரதீவுப்பற்று பிரதேச சபை பழுகாமம் வட்டாரம் கிழக்குத்தமிழர் கட்சியான (TMVP )இடம் வீழ்ந்தது.
இந்நிலையில் பழுகாமம் பறிபோனமைக்கு சாணக்கியனின் வேட்பாளர் தெரிவும் ஆதரவாளர்களும் காரணம் என கிராமவாசிகள் தெரிவித்தன.
கிழக்கு தமிழர் கட்சியில் படகு சின்னத்தில் பழுகாமம் வட்டாரத்தில் போட்டி இட்டு அதி கூடிய வாக்குகளால் வெற்றி பெற்ற சு.விக்கினேஸ்பரனின் ஆதரவர்களினால் தேர்தல் வெற்றி நேற்று இரவு வெடி கொழுத்தி கொண்டாடியமையினை எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தனர்.