சற்றுமுன் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!



பதுளை – லுனுவத்த பகுதியில் சனிக்கிழமை (21-06-2025)ஆம் திகதி  காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் இரு பேருந்துகளின் சாரதிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும் விபத்தின்போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த விபத்தில் இரு பேருந்துகளும் சேதமடைந்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை