மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளராக இளையதம்பி திரேசகுமாரன் தெரிவு!



மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச தவிசாளர் தெரிவு இன்று (13-06-2025) ஆம் திகதி இடம் பெற்றன.

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி சார்பாக கோபாலபிள்ளை சுரேந்திரன் (பட்டிப்பளை வட்டாரம்) முன்மொழியப்பட்டார்.சுயேட்சை குழு (பந்து) சார்பாக இளையதம்பி திரேசகுமாரன்,(அரசடித்தீவு வட்டாரம்) முன்மொழியப்பட்டார்.

வாக்கெடுப்பில் சுயேட்சைகுழு இளையதம்பி திரேசகுமார் 09, வாக்குகளும் (பந்து03+படகு 06=09)
தமிழரசுக்கட்சி கோபாலபிள்ளை சுரேஷ்குமார் 06, வாக்குகளும்(வீடு:06) பெற்றுக்கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தி 01, உறுப்பினர் நடுநிலை.

பிரதி தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சார்பாக கனகநாயகம் கபில்ராஜ் (கொக்கட்டிச்சோலை வட்டாரம்) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை