கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவிடம் முன்வைக்கப்பட்ட பொதுப் பிரச்சினைகளுக்கான தீர்வுச் செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்கான திட்டங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய ஆளுநரின் அறிவுறுத்தலின் பிரகாரம் மாவட்டங்கள் தோறும் பொதுமக்கள் தினம் ஏற்படுத்தப்பட்டு, மக்களின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அம்பாறை மாவட்டச் செயலகத்தில் பொதுமக்கள் தினம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திரு. ஜே.எஸ். அருள்ராஜ், அம்பாறை உதவி மாவட்டச் செயலாளர், மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பான நிறுவனத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இங்கு, பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை பொறுப்பான அதிகாரிகளிடம் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது, மேலும் ஆளுநர் மற்றும் உதவி மாவட்டச் செயலாளரிடமும் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.