தனியார் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இன்று(30-06-2025) நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகியுள்ளது.
கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனமும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.