மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியிலுள்ள கருவம்பஞ்சோலை குளத்தில் இன்று(06-07-2025 ) ஆம் திகதி மாலை 3 சிறுவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11வயதான 2 சிறுமிகளும் ஒரு சிறுவனுமாக 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று(06-07-2025)ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்த மூவரில் இரண்டு சிறுமிகளும் உள்ளடங்குவதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மூவரும் 11 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்ததோடு, மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.பி.எச். சில்வா தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.



