சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது!



கட்டான – தெமன்ஹந்திய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நான்கு சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் கட்டியால பகுதியைச் சேர்ந்த 51 மற்றும் 58 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டி-56 ரக துப்பாக்கி, ரிவால்வர் துப்பாக்கிகளை தயாரிக்கப் பயன்படுத்தக்கூடிய ஒரு மாதிரி மற்றும் துப்பாக்கிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பல உபகரணங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மற்ற சந்தேக நபரிடமிருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டனர்.

நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கட்டான பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை