குளியாப்பிட்டி, பள்ளப்பிட்டி பகுதியில் இன்று (27.08.2025) பாடசாலை வேன் ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் மற்றும் வேன் சாரதி என மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் 13 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் குளியாப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.