மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

                                                                                                                                                                          மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான 2வது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு  தலைமையில் போரதீவுப்பற்று கலாசார மண்டபத்தில் இன்று (26.08.2025) இடம்பெற்றது.
                                                                                                                                                                                இக் கூட்டத்தில் சென்ற பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச அபிவிருத்தி  குழுத் தலைவரினால் விரிவாக ஆராயப்பட்டதுடன் தீர்மானங்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
                                                                                                                                                                                காணி , மீன்பிடி, கல்வி, மற்றும் மின்சார சபை, நகரசபை, நீர் வழங்கல், கால்நடை, போக்குவரத்து, சுகாதாரம், வைத்தியசாலை, வீதி அபிவிருத்தி, பொலிஸ் போன்ற முக்கிய துறைகளின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
                                                                                                                                                                                இவ் ஆண்டின் ஒதுக்கீடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக உதவித் திட்டமிடல் பணிப்பாளரினால் விளக்கக் காட்சிகள் மூலமாக தெளிவுபடுத்தப்பட்டது.
                                                                                                                                                                                போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராசபுத்திரன் சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், பாராளுமன்ற உறுப்பினர் Dr. இளையதம்பி சிறிநாத், போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர்,வி.மதிமேனன் உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் செ.பிரபாகரன், பிரதேச செயலகப் பிரிவின் திணைக்களத் தலைவர்கள் , பிரதேசத்தின் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை