பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில் இன்று(21.08.2025)துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்த ஒருவர் மீது T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கோண்டு வருகின்றனர்.