பண்டாரகமவில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு!

பண்டாரகம, துன்போதிய பாலத்திற்கு அருகில்  இன்று(21.08.2025)துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், காரில் பயணித்த ஒருவர் மீது T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக முதற்கட்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த விடயம்  தொடர்பான  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கோண்டு வருகின்றனர்.
புதியது பழையவை