முறிகண்டி அக்கராயன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு.!

இன்று (10.08.2025)ஆம் திகதி மதியம் அக்கராயன் முறிண்டி வீதியூடாக பயணித்த காரும் மோட்டார்சைக்கிளும்  மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிலை செலுத்திச் சென்ற  பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அக்கராயன் பிரதான வீதியில் 05 வது மைல் கல் பகுதியிலே விபத்துச் சம்பவித்திருக்கிறது. உயிரிழந்தவர்  இயக்கச்சியை சேர்ந்த குடுப் பெண்ணாவார்.

உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையை கிளிநொச்சி பொலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
புதியது பழையவை