உகந்தை மலை முருகன் ஆலய ஆடி வேல் விழா தீர்த்தோற்சவம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடி வேல் விழா உற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று (09.08.2025)காலை  சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.


இதனை தொடர்ந்து முருகபெருமானுக்கு காலை 8.30 மணியளவில் வசந்த மண்டப சிறப்பு விசேட பூசைகள் இடம்பெற்றன.


சுமார் ஆயிரம் அடியார்களின் அரோகரா கோசம் விண்ணைப் பிளக்க சரியாக 11.48 மணியளவில் சமுத்திர தீர்த்தம் இடம்பெற்றது.


பல இடங்களிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் சமுத்திர தீர்த்த உற்சவத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை