தேசபந்து தென்னகோன் CID யினரால் கைது.!

அரகலய வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  இன்று (20.08.2025)மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த விவகாரம் தொடர்பாக தம்மை கைது செய்யாமல் இருக்க முன்பிணை கோரி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்வைத்த மனு முன்னதாக நிராகரிக்கப்பட்டது.
புதியது பழையவை