இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்.!

இன்று (30.09.2025) நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

புதிய விலைத் திருத்தத்தின்படி

95 ஒக்டேன் பெட்ரோல்: ஒரு லிட்டரின் விலை 06 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக ரூ.335 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

92 ஒக்டேன் பெட்ரோல்: விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

லங்கா ஒட்டோ டீசல்: ஒரு லிட்டரின் விலை 06 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக ரூ.277 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் டீசல்: விலையில் மாற்றம் இல்லை.

மண்ணெண்ணெய்: ஒரு லிட்டரின் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக ரூ.18 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட விலைத் திருத்தங்கள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை