மட்டக்களப்பில் வீதிக் கடவையில் வைத்து பெண் மீது மோதிய மோட்டார் சைக்கிள்!


வீதிக் கடவையில் வைத்து பெண்ணொருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (14.10.2025)ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வாழைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னாலுள்ள வீதிக் கடவையில் வைத்து இடம்பெற்றுள்ளது.

வீதிக் கடவை ஊடாக வீதியை குறுக்கறுக்கும் போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவ் விபத்தில் காயமடைந்த பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை