சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் இரட்டை முகம்..!

தனது நேர்மையையும் மனிதாபிமானத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கடந்த  22.10.2025 அன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள றிவேரா விடுதியில் பாதிக்கப் பட்டமக்கள், சிவில் சமூகத்தினர், சமயத் தலைவர்கள் என சுமார் 50 க்கு மேற்பட்டோரை அழைத்து "மௌனத்தின் எதிரொலிகள்" என்ற கவிதைத் தொகுப்புக்கள் அடங்கிய புத்தக வெளியீடு ஒன்றினை வெளியிட்டு தமது மனிதாபிமான சேவைகளையும் நடுநிலையான சேவைகளையும் எடுத்தியம்பினர்.

வரிக்கு வரி அவர்கள் வெளியிட்டு இருந்த புத்தகத்திலும் சரி பேச்சி லும் சரி " கானாமல் போனோர்" என்ற சொற் பதத்தினைத்தான் உபயோகித்தார்கள்.

இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர்கள் தந்த விளக்கம் ஆச்சரியத்தையும் வியப் பையும் ஏற்படுத்தியது.

அதாவது பாதிக்கப்பட்ட மேற்படி சமூகத்தினரை ஒரே சொல்லில் உள்வாங்குவதானால் காணாமல் போனோர் என்ற சொல்லைத்தான் தம்மால் கூற முடியும் என தமது அமைப்பு உத்தியோக பூர்வமாக தீர்மானித்துவிட்டதாக தெரிவித்தனர்.

அப்படியானால் காணாமல் போனோர் மற்றும் காணாமலாக்க ப்பட்டோர் என்ற இரு சொல்லையும் இணைத்து உபயோகிக் கலாம்தானே.உண்மையாக நீதி கோருவோரை புறக்கனிப்பது எந்த வகையில் நியாயம்? எனவும் கேட்க தோன்றுகிறது.

அதுமட்டுமல்ல ஒருபடி மேலேபோய் பாதிக்கப் பட்ட மக்களுக்காக நேரடி ஆதரவு வழங்கினால் தம்மால் இலங்கையில் பணியாற்ற முடியாமல் போகும் எனவும் தெரிவித்தனர்.இதுதானா உங்களது நடு நிலையும் ,மனிதாபிமா னமும்?

கானாமல் ஆக்கப்பட்டோ ர் என்ற விடயம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவர்களைக் காணாமல் ஆக்கியது யார் என்ற கேள்வி இங்கு தானாகவே எழுப்பப்படு கிறது. இதில் பொறுப்புக் கூறல் என்பது தவிர்க்க முடியாததாகின்றது. எனவேதான் இவர்கள் அரசின் பக்கமாக தமது Project வேலைகளுக்காக செயற்படுகின்றனர் என பலரும் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் காணாமல் போனோர் அலுவலக பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது பணிகளை எடுத்துக் கூறினர்.
சரி யார் அந்த காணாமல் போனோர் என்ற விடயங்களை ஆராய்வோமானால்
- நாட்டைவிட்டு ஓடி ஒலிந்து வாழ்வோர்
- படகுகளில் புலம்பெயர்ந்து பயணம் செய்து காணாமல் போனோர்
- தமது விருப்பத்துடன் அரச படையில் சேர்ந்து காணாமல் போனோர்.
இதுபோன்ற இன்னும் பலர் காணாமல் போனோராக கூறலாம்.

மேற்கூறப்பட்ட தரப்பில் அனேகமானோர் தாமாகவே தம்மை சுய விருப்பத்துடன் காணாமலாக்கியவர்கள்  என்பதுதான் உண்மை 
குறிப்பாக அரச முப்படை களிலும் இருந்து காணாமல் போனோர்.

இவர்களது சேவைக் காலங்களில் இவர்களுக்கு ஏற்படும் அணைத்து விதமான இழப்புகளுக்கும் ஏதோவொரு வகையில் அரசினால் அதற்குரிய இழப்பீடுகள், சட்டத்தின் மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது.

ஆனால் இதே படையினரிடம் கையலித்த  கானாமல் ஆக்கப்பட்டோருக்கு எவ்வித பரிகார நீதியும் கிடையாது .அதுமட்டுமல்ல உங்கள் அமைப்பின் பெயரைக் கூட எம்மால் கூற முடியாது என்றால் என்ன நியாயம்?

சர்வதேச செஞ்சிலுவை சங்கமானது 2000 பேரது தகவல்களைச் சேகரித்து ஒரு ஆய்வினைச் செய்து பார்த்ததாகவும் அதில் 40%க்கு மேற்பட்டோர் மரணச் சாண்றிதழ் களைப் பெற்றுள்ளதாகவும் இதில் அனேகமானோர் வடமத்தி மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலையும் வெளியிட் டனர்.அப்படியானால் காணாமலாக்கப் பட்டோரது அலுவலகம் செய்து வரும் பணிகளை தாங்களும் மதிப்பீடு செய்து ஒத்துழைக்கிறீர்கள்.
உண்மையாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் OMP அலுவலகம் வேண்டாம் என போராடி வரும் நிலையில் அவர்களுக்கான நீதிப் பொறிமுறையை பெற்றுக் கொடுக்க பின்னடிப்பது ஏன்?

அத்துடன் இதில் 365 பேர் முப்படையிலும் இருந்து காணாமல் போனவர்கள் என்ற தகவல்களையும் தங்களது ஆய்வறிக்கை யில் கண்டறியப் பட்டுள்ளதாக கூறினீர்கள். ஆனால் படையினரால் கானாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கை  எத்தனை பேர் என்பதனை அவர்கள் குறிப்பிட தவறிவிட்டனர்.

அப்படியானால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து காணாமல் போனோரது விபரம் உங்களிடம் உள்ளனவா என்ற வினாவும் எழுப்ப பட்டது அதற்கு பதிளலிக்கையில் அவர்கள் தொடர்பில் சில தாய்மார்  மேற்படித் தகவலைச் சொல்லாமல் பதிந்துள்ளார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.

மனிதாபிமானம் மற்றும் நடுநிலையுடன் பணியாற்றுபவர்களானால் உத்தியோக பூர்வ மாக விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந் த போது பல்வேறுபட்ட தரப்பினராலும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி கள் உறுப்பினர்களது தகவல்களையும்  சேர்த்துக் கொள்ள வேண்டும் என பலரும் பேசுகின்றனர்.

அத்துடன் அவர்களால் வெளியிடப்பட்ட "மௌனத்தின் எதிரொலிகள்"
என்ற புத்தகத்தில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆக்கங்கள் காணப்படு கின்றது.
அதாவது காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் என இரு சமூகத்தினரது ஆக்கங்களையும் ஒன்றாக இணைத்து.இங்கு இரு சமூகமும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றுகின்றனர். என்ற விம்பத்தினை இச் செயற்பாடு சர்வதேசத்திற்கு பறை சாற்றி நிக்கின்றது.
அதற்கேற்றாற்போல் 
தமிழ்
ஆங்கிலம்
சிங்களம்
என மூன்று மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.

அத்துடன் கவிதையின் 13ம் பக்கம் "அன்புக்குரிய வீர மகனே"
என்ற தலைப்பில் மல்லிகா ஜெயசிங்ஹ என்ற சிங்களச் சகோதரி  மூன்றாவது வரியில் கூறியுள்ளார் "கோரப் புலிகளி்ன் கோரப் பசிக்கு
உன்னைப் பறித்துச் சென்றார்கள் .என்ற ஒரு சொல்லும் காணப்பட்டது.

மதிய உணவிற்காக எல்லோரும் சென்று திரும்ப வந்து பார்க்கும் போது எல்லோரது புத்தகங்களிலும் 13 ம் பக்கத்தில் அந்த சொல் மிக கடுமையாக அழிக்கப் பட்டிருந்தது.அதனை தாங்களே செய்ததாகவும் குறிப்பிட் டனர்.  ஒரு தரப்பை மட்டும் பகிரங்கமாக குற்றம் சுமத்திய ஆக்கத்தினை நீங்கள் எப்படி உள் வாங்கினீர்கள் . இதுதான் உங்கள் நடு நிலையா?
 அந்த மண்டபத்தில் கடுமையான கேள்விகள் எழுந்ததன் காரணத்தினால் நீங்கள் அதை அழித்தீர்களா? என்று எண்ணத் தோன்றுகிறது. பல ஆயிரக் கணக்கான புத்தகங்களை அச்சிட்டு வெளியீடு செய்த பின்னர் எங்களுக்கு முன் வைத்திருந்த புத்தகத்தில் அழித்தால் முழு அச்சுப் பிரதிகளும் அழித்தமைக்கு சமனாகு மா?  இது தானா உங்கள் தர்மம்?
இதுதான் நீதியா?

எனவே எந்த வகையிலும் சர்வதேச பொறிமுறையுடனான நீதி கோரலுக்கும் இம்மாதிரியான அமைப்புக்கள் எமக்கு துணை நிக்கப் போவதில்லை. என்பது அன்றைய கலந்துரையாடல் மற்றும் செயற்பாடுகள் நிருபித்து நிக்கின்றன.

தாங்கள் தொடர்ந்து ஜனாதிபதியுடன் பேச்சுக்களை நடாத்துவதாகவும் அவை சுமுகமான முறையில் நடைபெறுவதாகவும் கூறினார்கள்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை என்றால் என்ன? உள்ளக பொறிமுறைக்குள் கண் துடைப்பு நாடகம் ஒன்றினை இவர்களும் சேர்ந்துதான் அரங்கேற்றுகிறார்கள்.

எனவே வடக்கு கிழக்கு காணாமலாக்கப் பட்டோர் சங்கமானது தீர்கமான சில முடிவுகளை மிக விரைவாக எடுக்க வேண்டிய காலமிது. 
அன்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறுபதாவது கூட்டத் தொடரில் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற பண்ணாட்டு நிறுவணங்களின் செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப் பட்ட மக்கள் சார்பில் எமது அதிர்ப்திகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரம் 
 இம்மாதிரியான அமைப்புக்களுடன் இணைந்து பயணிப்ப தால் எமது பலம் பலவகையிலும் பலவீனப்படுத்தப்படுகிறது.

எனவே சம்மந்தப் பட்டோர் இதனைக் கருத்திற் கொள்வது நன்று.
காணாமல் போனோர் என்று கூறப்படும் படைத் தரப்பின் கவிதைகளும் படைத்தர ப்பால் காணாமலாக்கப்பட்டோ ரது ஆக்கங்களும் ஒரே அமைப்பில்
ஒரே புத்தகத்தில் இணைந்து இருப்பது எந்த வகையில் சரி. அநீதி இழைத்தோரையும் அநீதிக்கு நீதியை கோருவோரையும் எப்படி ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியும்.
நன்றி.

ச.சிவயோகநாதன்{சீலன்} மனித உரிமை செயற்பாட்டாளர்
மட்டக்களப்பு
29.10.2025
புதியது பழையவை