மட்டக்களப்பு பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி பெருவிழா நேற்று (08.10.2025)ஆம் திகதி காலை தீமிதிப்பு உற்சவத்துடன் நிறைவு பெற்றது.

இலங்கையின் மதுரை மீனாட்சி ஆலயம் என்ற சிறப்பினைப் பெற்ற பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி பெருவிழா கடந்த (27.09.2025)ஆம் திகதி திருக்கதவு திற த்தலுடன்ஆரம்பமானது.

10 தினங்கள் ஆலயத்தில் சக்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றதுடன் ஆலயத்தின் சிறப்பு சடங்கான வீரகம்பம் வெட்டும் நிகழ்வு, வாழைக்காய் எழுந்தருளும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நேற்றுமுன் (07.10.2025) சக்தி மகா யாகம், நோர்ப்புக்கட்டுதல், கங்கை நீராடல், ஊர்காவல் போன்றன நடைபெற்றது.
நேற்று காலை அம்பாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தீக்குளி காவல், பூஜைகள் நடைபெற்று தேவாதிகளுடன் ஆயிரக்கணக்கான அடியார்கள் தீமிதிப்பில் கலந்துகொண்டனர்.

தீமிதிப்பினை தொடர்ந்து சாட்டைச்சடங்கு மற்றும் தேவாதிகள் வாக்குச் சொல்லும் நிகழ்வு நடைபெற்றதுடன் ஆயுத பூஜையும் நடைபெற்றது.
புதியது பழையவை